தமிழ்நாடு

50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம்..! : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம் வசூல் ஆகியுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வரலாறு காணாத முன்னெடுப்பு :- சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை.

கடந்த 50 நாட்களில், ரூ. 6,50,22,770 /- அபராதம் வசூல். ரூ.1,19,12,000/- அபராதம் 1181 நபர்களிடமிருந்து குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வசூல்.

274 முறை ஒரே வாகனம் அதிகபட்ச விதிமீறல். முழு அபராதமும் வசூல். 67 வாகனங்கள் 100க்கும் மேற்பட்ட முறை போக்குவரத்து விதிமீறல். முழு அபராதமும் வசூல். 12 காவல் அழைப்பு மையங்களின் சிறப்பான செயல்பாடு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button