போலீஸ் செய்திகள்

14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 24 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் நீலகிரி, கோவை, பெரம்பலூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், கரூர், நாகை, சேலம், தென்காசி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்ட எஸ்.பி.,க்கள் உட்பட 24 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:

அதிகாரிகள் பெயர் – மாற்றப்பட்ட பதவி

நிஷா – நீலகிரி எஸ்.பி.,
ஆல்பர்ட் ஜான் – தூத்துக்குடி எஸ்.பி.,
கார்த்திகேயன்- கோவை எஸ்.பி.,
ஆதர்ஷ் பசேரா- பெரம்பலூர் எஸ்.பி.,
ஸ்ரேயா குப்தா- திருப்பத்தூர் எஸ்.பி.,
கவுதம் கோயல்: சேலம் எஸ்பி
அருண் கபிலன்- நாகை எஸ்பி.,
பெரோஷ்கான் அப்துல்லா- கரூர் எஸ்பி.,
கண்ணன்- விருதுநகர் எஸ்.பி.,
ஸ்டாலின் – மயிலாடுதுறை எஸ்.பி.,
பிரபாகர்- திருவண்ணாமலை எஸ்.பி.,
மகேஸ்வரன்- தர்மபுரி எஸ்.பி.,
ஸ்ரீநிவாசன்- தென்காசி எஸ்.பி.,
மதிவாணன்- வேலூர் எஸ்.பி.,
செல்வநாகரத்தினம்- திருவல்லிக்கேணி துணை கமிஷனர்
ஹரி கிரண் பிரசாத் – மைலாப்பூர் துணை கமிஷனர்
புக்யா ஸ்னேகா பிரியா – சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர்
சுந்தர வடிவேல் – சென்னை பூக்கடை பஜார் துணை கமிஷனர்
சுப்புலஷ்மி- கோயம்பேடு துணை கமிஷனர்
சுஜித் குமார் – போலீஸ், பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர்,சென்னை
மேகலினா ஐடன்- போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனர், சென்னை
சக்தி கணேசன் – நுண்ணறிவுப்பிரிவு, கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர், சென்னை
கீதாஞ்சலி – சென்னை மத்தியகுற்றப்பிரிவு -2 துணை கமிஷனர்
ரமேஷ் பாபு- சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு, துணை கமிஷனர், ஆக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button