தமிழ்நாடு

சொந்த கார் வைத்திருப்பவர்களுக்கு ரூ.275 மாதாந்திர சலுகை அட்டை: சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை முழுமையாக அமல்

சென்னை, 
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்காக ரொக்கமாக பணம் செலுத்த நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் நேரம் வீணடிக்கப்படுவதுடன், எரிபொருள் செலவும் அதிகரித்து வந்தது. இப்பிரச்சினையை தவிர்க்க, இந்திய நெடுஞ்சாலை ஆணையம் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறை, நேற்று அதிகாலை முதல் முழுமையாக அமல்படுத்தப்பட்டது.
இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வானகரம், போரூர், சூரப்பட்டு, மாத்தூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. ஏற்கனவே ‘பாஸ்டேக்’ முறைக்கு மாறிய வாகனங்கள் வரிசையில் நிற்காமல் விரைவாக சுங்கச்சாவடிகளை கடந்து சென்றன.
சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் பலர் இந்த முறைக்கு மாறாததால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்ட்டர்களில் ‘பாஸ்டேக் ஸ்டிக்கரை’ வாங்கி கார்களின் முகப்பில் ஓட்டிக்கொண்டு சென்றனர். ஸ்டிக்கர் வாங்க விரும்பாதவர்கள் அதிருப்தியுடன் இரு மடங்கு கட்டணங்களை செலுத்தி சென்றனர். சிலர் சுங்கச்சாவடி பணியாளர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button