செய்திகள்தமிழ்நாடு

குறை தீர்வு முகாம் பதிவுத் துறை உத்தரவு

பத்திரப்பதிவு தொடர்பான தங்கள் குறைகளை தெரிவிக்க, திங்கள்கிழமை தோறும் சார் – பதிவாளர் அலுவலகங்களில் குறை தீர்வு முகாம்கள் நடத்த பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 575 சார்- பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு, பத்திரப் பதிவுக்காக வரும் மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க, தலைமையகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, திங்கள்கிழமை தோறும் சார் – பதிவாளர் அலுவலகங்களில், மக்கள் குறை தீர்வு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. காலை 10:00 முதல் பகல் 1:00 மணி வரை மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும்.இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களை வரிசைப்படுத்தி பதிவு செய்வது, நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக, ஒன்பது கட்டளைகள் அடங்கிய அரசாணையை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி பிறப்பித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button