தமிழ்நாடு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் புதிதாக டிஎஸ்பி பதவி ஏற்று பல அதிரடி நடவடிக்கை!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சரகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் துணைக்கண்காணிப்பாளர் எஸ்.பிரசன்னா அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சரக காவல் துணைக்கண்காணிப்பாளராக இருந்தபோது பொதுமக்கள் எந்த நேரமும் தனக்கு நேரடியாக புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தார். அதேபோல, ஒரத்தநாடு தாலுகாவிற்கு வந்தவுடன் அவர் கன்ட்ரோலில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களையும் அழைத்து, காவல்நிலையங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் பல நாட்களாக உள்ள குற்றவாளிகளை கேட்டு உடனடியாக யாராக இருந்தாலும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் புகார் தர வரும் பொதுமக்களிடம் பொறுமையாக புகார்களை கேட்டு குற்றச்செயல்கள் எதுவாக இருந்தாலும் உடனே விசாரணை செய்து எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை வருகிறார். காவல்நிலையங்களில் உள்ள எல்லா காவலர்களிடமும் மைகில் அவரே பேசுகிறார். காவல்கள் தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆயுதப்படை மாற்றம் செய்யப்படும் என்கிறார். மணல் கடத்தல், கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்.

நீதியின் நுண்ணறிவு இதழின் சார்பாக வாழ்த்துக்கள்..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button