தமிழ்நாடு

தரமற்ற வீடு கட்டிய விவகாரம்… அதிகாரிகள் சஸ்பெண்ட்..! -: கலெக்டர் ஆர்த்தி அதிரடி!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இருளர் பழங்குடியினருக்காக ஒவ்வொரு குடியிருப்புகளும் ரூ.4 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நிலையில், அக்குடியிருப்புகள் தரமற்ற வகையில் கட்டப்பட்டு வருவது தெரிய வந்ததை கண்டு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து அங்கிருந்த ஒப்பந்ததாரர் பாபு என்பவரை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அழைத்து வசைப்பாடினார்.

ஏழைகளுக்காக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை இவ்வாறு தரமற்ற வகையில் கட்டுவது எவ்விதத்தில் நியாயம் என்றும், இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என பலமுறை நடந்த கூட்டங்களில் அறிவுறுத்தியும், நீங்கள் இவ்வாறு பணியை மேற்கொண்டுள்ளீர்கள். இது போன்று ஈடுபட்டால் தங்களை லஞ்ச ஒழிப்பு போலீசிடம் பிடித்து தான் கொடுக்க வேண்டும் என்றும், தரமான முறையில் கட்டித்தர முடியவில்லை என்றால் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்ய நேரீடும் என கடுமையாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஒப்பந்ததாரர் பாபுவை கடிந்துக் கொண்டார்.

இந்நிலையில் ஊத்துக்காடு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் இருளர் பழங்குடியினருக்கான குடியிருப்புகள் தரமற்ற முறையில் உள்ளதாலும், இப்பணிகளை முறையாக மேற்பார்வை மேற்கொள்ளாததாலும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகிய இருவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்ட உள்ளார்.

மேலும் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் அதிகாரிகளுக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button