போலீஸ் செய்திகள்

பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு : மடிப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு சென்னை காவல்ஆணையர் பாராட்டு

மடிப்பாக்கம் பகுதியில், கொரோனா ஒமைக்ரான் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய, S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் N.சிவக்குமார் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் திரு.N.சிவக்குமார், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகள் வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினார்.

கொரோனா ஒமைக்ரான் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய, S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.N.சிவக்குமார் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 08.01.2022 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button