போலீஸ் செய்திகள்
சிறப்பாக செயல்பட்ட திருச்சி மாவட்ட காவல்துறையினர்… : பாராட்டு தெரிவித்த காவல்ஆணையர்

திருச்சிராப்பள்ளி மாநகர காந்திமார்க்கெட் காவல்நிலைய கு.எண்-1466/2020 U/s 457, 380 IPC என்ற கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரியை கண்டறிந்து கைது செய்ததும், அவரிடம் இருந்து வழக்கின் சொத்துக்களை கைப்பற்றி சிறப்பான பணி செய்த காந்தி மார்க்கெட் குற்றவியல் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர்ளையும், ஸ்ரீரங்கம் காவல்நிலைய கு.எண்- 61/2021 U/s 420 IPC என்ற மோசடி வழக்கில் துரிதமாக செயல்பட்டு சேலத்தை சேர்ந்த பெண் எதிரியை கண்டறிந்து கைது செய்தும் மற்றும் அவரிடம் இருந்து வழக்கின் சொத்துக்களை கைப்பற்றபற்றி சிறப்பான பணி செய்த ஸ்ரீரங்கம் குற்றவியல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் அனைவரையும் திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து சான்றிதழ்களும், பண வெகுமதியும் அளித்து வெகுவாக பாராட்டினார்கள்.