பெண் காவல்ஆளினர்கள் குறைதீர்க்கும் மனு பெட்டி : காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர். மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப ., ஆயுதப்படை காவல் ஆளினர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட ரூபாய் 4.8 இலட்சம் மதிப்புள்ள புதியகுடிநீர் சுத்திகரிப்பு மையத்தையும் (R O Plant) பெண் காவல் ஆளினர்கள் குறைதீர்க்கும் மனு பெட்டி வசதியையும் துவக்கி வைத்து மருத்துவமனை பணியில் உள்ள ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கியும் இறந்துபோன ஆயுதப்படை தலைமைகாவலர் மோகன்ராஜ் என்பவர் குடும்பத்திற்கு மனைவி நிர்மலா இரு குழந்தைகளிடம் ஆயுதப்படை காவலர்கள் சேகரித்து வழங்கிய உதவித்தொகை ரூபாய் 2.5 இலட்சத்திற்கான வரைவோலையையும் வழங்கி பணியில் பாதுகாப்புடன் தொற்று ஏற்படாமல் அனைவரையும் நடந்து கொள்ள வாழ்த்தி சிறப்பித்தார்கள்.
உடன் கூடுதல் காவல் ஆணையர்கள் தலைமையிடம் மற்றும் போக்குவரத்து இணை ஆணையர் தலைமையிடம் துணை ஆணையர்கள் திருவல்லிக்கேணி நுண்ணறிவு பிரிவு ஆயுதப்படை ஆயுதப்படை காவல் அதிகாரிகள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

