போலீஸ் செய்திகள்

இ-செலான் மோசடி.. புது வகை சைபர் கிரைம்..!

உலகம் நவீனமயமாக மாறி வருவதை போல குற்றங்களும் அதற்கு ஏற்றாற்போல் அப்டேட் ஆகி வருகின்றன. பொதுமக்களின் அறியாமையை மூலதனமாக பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்தே திருடர்கள் கோடிக் கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இணைய வழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது.

அந்த வகையில், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து அவர்களின் அனுமதி இல்லாமலேயே பணத்தை திருடுவது சாதாரணமாகி வருகிறது. அதுபோன்ற குற்ற முயற்சி தற்போது சென்னையில் தலைதூக்க தொடங்கி இருக்கிறது. அதனை ஆரம்ப கட்டத்திலேயே முறியடிக்கும் வேலையில் சென்னை போக்குவரத்து போலீசார் களமிறங்கியுள்ளனர்.

அதாவது, இ-செலான் மோசடியை சைபர் கிரைம் திருடர்கள் தொடங்கி இருப்பதாக சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையினரை போன்று குறுஞ்செய்தி அனுப்பி பணம் மோசடி நிகழ்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக அபராதம் விதிக்கும் காவல்துறையினர் “echallan.parivahan.gov.in”. என்ற இணையதள முகவரியையே பயன்படுத்துவார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ள போக்குவரத்து போலீஸ், சைபர் மோசடி கும்பல் https://echallanparivahan.in/ என்ற மோசடி இணையதளத்தின் மூலமாகவும் தனியாக இமெயில் மற்றும் பணம் செலுத்துமாறு கூறி மோசடி செய்வதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே போக்குவரத்து அபராதம் விதிக்கும்படி குறுஞ்செய்தி வந்தால் அதை சரி பார்த்து காவல்துறை அபராதம் விதித்துள்ளதா, அதிகாரப்பூர்வ அபராதம் செலுத்தும் இணையதளமா என்பதை முறையாக சரிபார்த்து பொதுமக்கள் பணத்தை செலுத்துமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button