5 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சுற்றி வளைத்து கைது செய்த தஞ்சாவூர் போலீஸ்..!

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கொலை கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து கட்சிக்காரர்கள் அவர்களை மிரட்டி பணம் பறிப்பது முக்கியஸ்தர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த செல்வகுமார் என்கின்ற சடையன்கால் செல்வகுமார் கடந்த 5 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்தவரை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, இ.கா.ப, அவர்களின் உத்தரவுப்படி SP தனிப்படை உதவி ஆய்வாளர் R.ராஜேஷ் குமார் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் R.கணபதி மற்றும் தலைமை காவலர்கள் உமாசங்கர், ராஜேஷ் மற்றும் காவலர்கள் அருள்மொழிவர்மன், நவீன், அழகு சுந்தரம், மற்றும் சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை மதுரை மாவட்டம் கடச்சநேந்தல் பகுதியில் ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை மாவட்டம் கடச்சநேந்தல் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.