தமிழ்நாடு

கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி!

இத்தரணியிலே பிறந்தோம் ஒரு பரணி நாளிலே
(பரணியிலே பிறந்தால் தரணி ஆள்வர் என்பார்கள்) பின்
தவழ்ந்து மகிழ்ந்தோம் தாயின் மடிதனிலே, மண்ணின் மைந்தர்களாக
தந்தையிடம் நல்லறிவு தகவல்களை கேட்டறிந்தோம் பலவற்றை
தங்கையிடம் கேட்டறிந்தோம் சகிப்பதன் மதிப்பதனை
ஆசானிடம் கற்றறிந்தோம் அமுதமொழி தமிழதனை – ஆயினும்
அனைவரிடத்தும் எங்கள்பால் அரவணைப்பில்லை..
எப்படி அறிவீர்கள் எங்களது திறன்பற்றி, இருப்பினும் கேட்டுப்பாருங்கள்
அதோ அந்த பறக்கும் பறவையிடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
பாரெங்கும் பறந்து சென்று மலரும் மன்னர்கள் என்று கூறிடும் எங்களைப் பற்றி
காகத்திடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
கா-காவென கரைந்து, இவர்கள் ஒற்றுமையில் எங்களை மிஞ்சிடும் மிதவாதிகள்
என்று கூறிவிடும் எங்களைப்பற்றி,
பாடிச்செல்லும் குயிலிடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
இனிமையாகப் பாடிச்சொல்லும் இவர்கள் எதிர்கால மருத்துவர்கள் என்று.
மழலை மொழி பெசும் கிளியிடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
குழந்தை மொழியிலே பேசி இவர்கள் வருங்கால ‘கலாம்’ என்று கூறிவிடும் – எங்களைப்பற்றி
நீரிலிருந்து பாலை பிரித்துண்டு தூதுபோன அந்த அன்னப்பறவையிடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
அழகு நடைபுரிந்து, அவர்கள் எதிர்கால ‘ஆசிய ஜோதி’ என்று கூறிவிடும் – எங்களைப்பற்றி
நமது தேசியப்பறவையிடம் கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி – அது
தோகை விரித்தாடி இவர்கள் “பேக” வள்ளலென்று புகழ்ந்துவிடும் – எங்களைப்பற்றி
கோவர்த்தன கூட்டத்திடம் கேட்டிடுங்கள் எங்களைப்பற்றி – அவை
எங்களைப்போல் பாலீந்து தாயாக பயன்புரிவர் என்று கூறிவிடும் – எங்களைப்பற்றி
தமிழ் கடவுளுக்கு கொடியான சேவலிடம் கேட்டிடுங்கள் எங்களைப்பற்றி – அது
கூரை ஏறிக்கூவிச் சொல்லும், எங்களது விடிகாலை விழிப்புப்பற்றி – நம்
தலைநகர் சென்று மெரினாவில் கேட்டிடுங்கள் எங்களது சாதனை பற்றி – அது
கத்தியின்றி, ரத்தமின்றி, போர்புரிந்து மீட்டுத்தந்த ஜல்லிக்கட்டின் வெற்றிபற்றி புகழ்ந்து சீரிடும் – எங்களைப்பற்றி
வீரத்துறவி விவேகியிடம் கேட்காமலே கூறிவிட்டார் – எங்களைப்பற்றி
அவர்கள் எதையும், எப்போதும் சாதிப்பார்கள் என்று சூளுரைத்து
All the Powers with in you, you can do anythink and everything என்று
எப்போதோ புகழ்ந்து கூறிவிட்டு – மேலும்
என்னிடம் நூறு மாணவ மணிகளை ஒப்படையுங்கள் – இந்நாட்டை
செப்பனிட்டு, சீர்தூக்கிடுவேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார் – எங்களைப்பற்றி
இதுதான் மாணவ சமுதாயமாகிய நாங்கள்
இப்போதாவது எங்களைத் திரும்பிப் பாருங்கள், அரவணையுங்கள்,
எங்களைப்பற்றி கூறி முடிக்க இத்தகவல்கள் போதுமென கருதி
மீண்டும் சந்திப்போம்.

ஆ.இராமானுசம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button