போலீஸ் செய்திகள்

காணாமல் போன ரூ.18 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள் மீட்பு : திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி..

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு (பொறுப்பு) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் B.பாலச்சந்திரன் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் V.ரமா தலைமையில் கைபேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களில் 100 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு 01.03.2024 அன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 18,96,865 /- ஆகும்.

மேலும் காணாமல் போன (அ) தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக புகார் அளிக்க CEIR- Central Equipment Identity Register https://www.ceir.gov.in/ இணையதளம் இந்திய தொலைத்தொடர்பு துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த CEIR இணையதளத்தில் புகார்தாரர் தனது தொலைந்து போன (அ) தவறவிட்ட செல்போன் தொடர்பான விவரங்களை பதிவு செய்து புகார் அளிக்கலாம் (அ) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீது பெற்று CEIR இணையதளத்தில் பதிவு செய்து புகார் அளிக்கலாம். இவ்வாறு புகார் கொடுத்தபின் மனுதாரர் செல்போன் வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு Block செய்யப்படும். மேலும் மனுதாரர் செல்போனில் புதிதாக சிம்கார்டு பயன்படுத்திய நபரின் விபரங்கள் தொடர்பான அறிவிப்பு மனுதாரருக்கும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும் உடனடியாக அனுப்பப்படும். இதன் மூலமாக தொலைந்து போன (அ) தவறவிட்ட செல்போனை உடனடியாக மீட்க முடியும். இதன்படி திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார்களில் குறுகிய காலத்திற்குள் 2 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் (அ) https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button