போலீஸ் செய்திகள்

சிறப்பாக பணிபுரிந்த 58 காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு/ புனித தோமையர்மலை, காவல் ஆய்வாளர் திரு.சிவ ஆனந்த் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் திரு.வசந்தராஜா, திரு.ஹரிஹரசுதன், தலைமைக் காவலர்கள் திரு.சுரேஷ்குமார், திரு.ஸ்ரீஜித், திரு.தயாநிதி, திரு.இளைய பாரதிராஜா (த.கா.28652), S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் தலைமையில், தலைமைக் காவலர்கள் திரு.பெரிய கருப்பசாமி, திரு.ஞானவேல் என மொத்தம் 8 காவல் ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 34 காவல் ஆளிநர்கள் மற்றும் 1 இளநிலை உதவியாளர் என மொத்தம் 58 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை 31.05.2024 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு/புனித தோமையர்மலை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கஞ்சா கடத்தி வந்த வெளி மாநில குற்றவாளிகளை கைது செய்தும், S-7மடிப்பாக்கம் காவல் நிலைய குழுவினர் 6.1 கிலோ OG கஞ்சா கடத்தி வந்த குற்றவாளிகளை கைது செய்தும். மத்திய குற்றப்பிரிவு மற்றும் இதர சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மெச்சத்தக்க வகையில் பணிபுரிந்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button