போலீஸ் செய்திகள்

மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் உயரதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி

மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல் உயரதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. மேற்கு மண்டல ஐ.ஜி பரிசு வழங்கி பாராட்டினார்.

மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் 27.07.2024 அன்று கோவை மாவட்டம் மதுக்கரை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் துப்பாக்கி சுடும் போட்டி நடைப்பெற்றது.

பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி சுடும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் பரிசு கோப்பைகள் வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button