போலீஸ் செய்திகள்
150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்..
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி உட்கோட்டத்தில் உள்ள அறந்தாங்கி காவல்சரகத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இ.கா.ப., உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி 150 கிலோ கஞ்சா, 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 4 எதிரிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.