Uncategorized

நாணயம்

பணமே இல்லாதவன் பாவியா நல்லப்
பண்பே இல்லையா
பணத்தாலே உலகை ஆள எண்ணும்
மனப் பேய் மாறுமா

தீமை செய்யும் பெரிய மனிதர்
திரையால் மறைக்கிறார்
தவறைப் பணத் திரையால் மறைக்கிறார்
பாசம் அன்பு நீதி நேர்மையை
விலையால் வாங்குறார்
இந்த நிலைமை என்ற மாறுமோ
இதை நீயே கூறடா

இணைந்த உள்ளம் பிரியும்போது
இன்பமேதடா மனதில்
துன்பந் தானடா
பிறப்பில் உயர்வு தாழ்வு என்னும்
பேதமில்லையே உயர்
காதலில் பேதம் காணும் நிலைமை
என்று மாறுமோ

நாணயமென்பது பணமில்லை
நா கேடாதிருப்பது நாணயமே
சொல்லுஞ்சொல்லே நிலைத்தால்வரை
சுழலும் பூமியும் வணங்கிடுமே

சி.அடைக்கலம்
நெய்வேலி வடக்கு,
பள்ளத்தான்மனை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button